தீபாவளி தினத்தன்று மூன்று திரைப்படங்கள் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதத்தின் இறுதியில் திரையரங்குகள் மூடப்பட்டன.  திரையரங்க உரிமையாளா்கள் மற்றும் திரைத்துறையினரின் கோரிக்கையை ஏற்று  கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் புதிய திரைப்படங்கள் வெளியிடுவது தொடா்பான எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் இது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி இரண்டாம் குத்து,  பிஸ்கோத்,  இவனுக்கு சரியான ஆள் இல்லை ஆகிய திரைப்படங்கள் தீபாவளி தினத்தன்று வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.