பழம்பெரும் தமிழ் திரைப்பட நடிகர் கல்தூண் திலக் கொரோனாவால் தனது 78வது வயதில் உயிரிழந்துள்ளார்.

1981-ல் திரைக்கு வந்த கல்தூண் படத்தில் சிவாஜி கணேசனின் மகனாக நடித்து திலக் பிரபலமானார்.

ரஜினிகாந்தின் ஆறிலிருந்து அறுபது வரை மற்றும் ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது.

தாயில்லா குழந்தை, பேர் சொல்ல ஒரு பிள்ளை, வேலை கிடைச்சிருச்சு, வெள்ளிக்கிழமை விரதம் உள்பட 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

அதிக படங்களில் வில்லனாக வந்தார். சென்னையில் வசித்து வந்த திலக்குக்கு தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை எடுத்தும் பலன் இன்றி உயிர் பிரிந்தது.

சமீபத்தில் தான் கொரோனா தொற்றால் நடிகர் பாண்டு, டைரக்டர்கள் கே.வி.ஆனந்த், தாமிரா ஆகியோர் உயிரிழந்த நிலையில் தமிழ் திரையுலகில் அடுத்த உயிரை கொரோனா பறித்துள்ளது திரையுலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பழம்பெரும் நடிகர் ‛கல்தூண் திலக் கொரோனாவால் உயிரிழப்பு - Veteran actor  Kalthoon Thilak dead due to corona