மொத்தம் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை 75 மையங்களில் நடைபெறுகின்றது. ஒவ்வொரு மையத்திலும் சராசரியாக 4 முதல் 5 தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணப்படுகின்றன.

தமிழக சட்டமன்ற தேர்ததில் தபால் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

அதன்படி, வேளச்சேரி தொகுதி திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் மவுலானா முன்னிலை பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் அசோக் பின்னடைவை சந்தித்துள்ளார்.

அத்துடன், திமுக கூட்டணிகட்சிகள் மூன்று இடங்களில் முன்னிலையில் உள்ளன.

சென்னை அண்ணாநகரில் திமுக வேட்பாளர் மோகன் முன்னிலை பெற்றுள்ளார்.