நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4,21,066 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலை பரவி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. தினசரி பாதிப்புகள் 50 ஆயிரத்தை கடந்ததுடன், உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,18,46,652 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 59,118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் புதிய பாதிப்பு 60 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
நேற்று ஒரே நாளில் 257 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,60,949 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,12,64,637 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 32,987 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 4,21,066 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை 5,55,04,440 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.