கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு கோயம்பேடு மார்க்கெட்டில் கடைகள் படிப்படியாக திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. காய்கறி சந்தையில் உள்ள சில கடைகள் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருவதாக வந்த தகவலையடுத்து கோயம்பேடு மார்க்கெட் முதன்மை அதிகாரி கோவிந்தராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது காய்கறி வியாபாரத்துக்கு ஒதுக்கப்பட்ட கடைகளில் விதிமுறைகளை மீறி பழக்கடைகள் செயல்பட்டதாக தெரியவந்தது. இதையடுத்து அங்கு விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்த 6 கடைகளை பூட்டி சீல் வைத்தார். மேலும் ஒவ்வொரு கடைக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார்.
இதுபோல் விதிமுறைகளை மீறி செயல்படும் கடைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு அந்த கடைகள் சீல் வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.