முதலமைச்சர் விஜய்
தமிழ் நாட்டின் முதலமைச்சராக விஜய் பதவியேற்ற நிலையில் பல விஷயங்களில் அதிரடி முடிவெடுத்து வருகிறார். அந்தவகையில், முக்கிய இடங்களில் இருக்கும் மதுபான கடைகள் 717ஐ 2 வாரங்களில் மூட உத்தரவிட்டுள்ளார் முதலமைச்சர் விஜய்.
பதவி ஏற்ற வேகத்தில் பெண்கள் பாதுகாப்பு, போதைப் பொருள் கட்டுப்பாடு, மின் விநியோக பில், மதுக்கடைகள் மூடல் என மக்கள் முக்கியமாக அவதிப்படும் விஷயங்களில் அதிரடி முடிவு எடுத்தார்.

நாங்க ஒரே காலேஜ்
இந்நிலையில் மே 12 ஆம் தேதி நடந்த 2-ஆம் நாள் சட்டப்பேரவை கூட்டத்தின் போது எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய விஷயம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. முதலமைச்சர் விஜய்யும் நானும் ஒரே காலேஜ்.
ஆனால் இங்க நாங்க தான் சீனியர், எங்கள் அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறோம், நீங்களும் கேட்க தயாராக இருங்கள் என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
