இதுவரை யாரும் பெரிதளவில் கேளிவிப்படாத குலதீபக் ராஜயோகம் செவ்வாய் உருவாக்கியுள்ளது. இந்த ராஜயோகத்தால் மூன்று ராசிகள் பணக்கார யோகத்தை பெறப்போவதாக தற்போது ஜோதிடம் மூலம் கணிக்கப்பட்டுள்ளது.
ஜோதிடத்தில் செவ்வாய் பகவானுக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. கிரகங்களின் தளபதியாக விளங்கும் செவ்வாய் பகவான் தற்போது துலாம் ராசியில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் செப்டம்பர் 28 ஆம் தேதி அன்று குலதீபக் ராஜயோகத்தை உருவாக்கி இருக்கிறார்.
இந்த ராஜயோகமானது செவ்வாய் ஒரு ராசியின் 10வது வீடு அல்லது அதன் சொந்த ராசியில் உச்சத்தில் இருக்கும் பொழுது உருவாகும் யோகமாகும். இந்த ராஜயோகத்தை தனதாக்கி கொள்ளும் ராசிகளை பார்க்கலாம்.
மகரம் |
மகர ராசிக்காரர்களின் பத்தாவது வீட்டில் செவ்வாய் பகவான் இருப்பது குலதீபக் ராஜயோகத்தை உருவாக்குகிறது.
நீண்ட காலமாக வேலையில் இருந்த சிக்கல் விட்டு போகும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணமாகும். எதிர்காலத்திற்கான சேமிப்பில் ஈடுபடுவீர்கள். வேலையில் சம்பள உயர்வு கிடைக்கும். |
மேஷம் |
மேஷ ராசிக்காரர்களுக்கு குலதீபக் ராஜயோகம் மிகவும் நன்மைகளைத் தரும். மேஷ ராசியின் அதிபதியான செவ்வாய் ஏழாவது வீட்டில் அமர்ந்திருக்கிறார். சொந்தமாக தொழில் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். வேலை இடத்திலிருந்த வேலைப்பளு குறைந்து மன அழுத்தம் நீங்கும். தொழில் செய்து வருபவர்கள் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். நிதி நிலைமை எதிர்பாராத அளவு உயரும். |
கடகம் |
கடக ராசி காரர்களுக்கு குலதீபக் ராஜயோகம் மிகவும் நன்மை பயக்கும். கடக ராசியின் நான்காவது வீட்டில் செவ்வாய் பகவான் சஞ்சரிக்க இருக்கிறார். வேலையில் நீங்கள் குறிப்பிட தகுந்த மாற்றத்தை அனுபவிப்பீர்கள். உங்களின் வேலையைக் கண்டு மேலதிகாரிகள் மனமகிழ்ச்சி அடையலாம். உங்களுக்கான தனித்துவமான அடையாளத்தை உருவாக்குவீர்கள். ஆசைப்பட்ட விடயத்தை முடிக்க நேரிடும். |