ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவரின் பிறப்பு ராசியானது அவர்களின் எதிரிகால வாழ்க்கை, நிதி நிலை, மற்றும் விசேட ஆளுமைகள் மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என குறிப்பிடப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே உண்மைக்கும் நேர்மைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
அப்படி தங்களின் நேர்மையை காப்பாற்றுவதற்காக உயிரையும் விட தயாராக இருக்கும் உன்னத குணம் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கடகம்
கடக ராசியில் பிறந்த நபர்கள் உங்கள் வாழ்க்கையில் இருந்தால், அவர்கள் உங்களை எந்த வகையிலும் முதுகில் குத்த மாட்டார்கள் என்பதில் நீங்கள் நூறு சதவீதம் உறுதியாக இருக்கலாம்.
இவர்கள் பிறப்பில் இருந்தே உண்மையையும் நேர்மையையும் கடைப்பிடிப்பார்கள். இவர்கள் வாழ்நாளில் யாரையும் ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணத்தை மனதளவில் கூட கொண்டிருக்கமாட்டார்கள்.
இந்த ராசியினர் நீதிக்காக தங்களின் உயிரையும் கூட இழக்க தயாராக இருப்பார்கள். ஆனால் எந்த நிலையிலும் நேர்மை குணத்தை மட்டும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் எப்போதும் உறவுகளில் சிறந்தவர்களாக இல்லாவிட்டாலும், விசுவாசத்தைப் பொறுத்தவரை, நீங்கள் அவர்களை முழுமையாக நம்பலாம்.
அவர்கள் உங்களை வெறுத்தாலும் சரி, நேசித்தாலும் சரி, அவர்கள் எப்போதும் அந்த நிலைப்பாட்டிற்கு விசுவாசமாக இருப்பார்கள்.
இந்த ராசியினர் எதிரிகளுக்கும் கூட துரோகம் செய்ய மாட்டார்கள். இவர்களுக்கு எதையும் நேரடியாக நேர்மையான முறையில் கையாள்வது தான் பிடிக்கும்.
ரிஷபம்
தங்களின் அளவுகடந்த பிடிவாதத்திற்கு பெயர் பெற்ற ரிஷப ராசிக்காரர்கள், விசுவாசமான கூட்டாளிகளாகவும் நண்பர்களாகவும் இருப்பதிலும் பெயர் பெற்றவர்கள்.
அவர்கள் யாரை நேசிக்த்தாலும் சரி, வெறுத்தாலும் சரி அதில் நேர்மையை மட்டும் விடமாட்டார்கள்.இவர்கள் வாழ்க்கை முழுவதையும் நேர்மையாகவும் உண்மையாகவும் வாழவேண்டும் என்ற நோக்கத்தில் உறுதியாக இருப்பார்கள்.