தேசிய பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கு 2021ஆம் ஆண்டுக்கான மாணவர்களை இணைத்துக் கொள்ளும் செயற்பாடு கடந்த 28 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது.
கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மாணவர்களை இடைநிலை வகுப்புகளுக்கு இணைப்பதற்கான விண்ணப்பங்களை கல்வி அமைச்சுக்கு சமர்ப்பிக்க வேண்டாம் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பான முறைப்பாடுகளையோ அல்லது வௌி நபர்களினூடாக அச்சுறுத்தல் விடுப்பதையோ தவிர்த்துக் கொள்ளுமாறும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.