நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். தனது பயணத்தை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு சொல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.
சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சனிபகவான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் தற்போது பயணம் செய்து வருகின்றார்.
சனி பகவான் ஷஷ ராஜ யோகத்தை உருவாக்கியுள்ளார். இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு இது அதிஷ்டத்தை கொடுக்கப்போகிறது.
ரிஷபம்
- சனிபகவானின் ராஜயோகம் உங்கள் ராசியில் பத்தாம் வகுப்பு வீட்டில் நிகழ்கின்றது.
- இதனால் உங்களுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கக்கூடும்.
- நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் நீங்கள் புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
- குழந்தை இல்லாமல் கஷ்டப்பட்டவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
- இதுவரை இல்லாமல் இருந்த திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கக்கூடும். வருமானத்தில் மிகப்பெரிய லாபம் கிடைக்கும்.
துலாம்
- உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார்.
- அதனால் உங்களுக்கு பிறரிடம் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.
- தொழில் செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
- வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் அதனால் நீங்கள் முயற்ச்சி செய்வது அவசியம்.
- வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.
- உடல் ஆரோக்கியத்தில் சிறந்த முன்னேற்றம் இருக்கும்.
- கல்வி கற்கும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
மகரம்
- உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார்.
- நிங்கள் கடின உழைப்பால் உயர்ந்து கொண்டே செல்வீர்கள் பணம் உங்களிடம் சேர்ந்து கொண்டே போகும்.
- விருப்பங்கள் அனைத்தும் உங்களுக்கு ஏற்றவாறு நிறைவேறும்.
- வீட்டில் மங்கள காரியங்கள் நடக்க உள்ளது. நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
- திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகி சந்தோஷம் கிடைக்கும்.
- அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.