பாபா வங்கா "Cash Crush" கணிப்பு பற்றி மிகவும் தெளிவாக எடுத்துரைத்துள்ளார். இதை விரைவில் எதிர்பார்க்கலாம். இதன் ஆபத்து எப்படி இருக்கும் என்பது தொடர்ந்து பார்க்கலாம்.
உலகில் பல தீர்க்கதரிசிகள் இருந்தாலும், அவர்களில் பெரும் புகழ்பெற்றவர் பாபா வங்கா. பல்கேரியாவைச் சேர்ந்த இவர், தனது அதிசயமான கணிப்புகளால் உலகளவில் பெயர் பெற்றுள்ளார்.
அந்த வகையில் அவர் பலநூறு ஆண்டுகளுக்கு முன் கணித்த விடயங்கள் தற்போது நடந்துகொண்டு வருகின்றது. அந்த வகையில் 2026 இல் பொருளாதாரம் முதல் மிகவும் முக்கியமான விடயங்கள் பலிக்கப்போகின்றது அது என்ன என்பதை பார்க்கலாம்.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் முதல் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் தற்போது நடந்து வரும் பதட்டங்கள், முடிவில்லாத ரஷ்யா-உக்ரைன் மோதல்.
இந்த ஆண்டு மனித குலத்திற்கு எதிரான பல மோசமான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
மேலும் உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகள் பேரழிவை ஏற்படுத்தும் வெள்ளம், பூகம்பங்கள் மற்றும் வெப்ப அலைகளால் பாதிக்கப்பட்டுள்ளன.
பாபா வாங்கா கணித்துள்ள மிகவும் ஆபத்தான கணிப்புகளில் ஒன்று 2026 ஆம் ஆண்டில் ஒரு குறிப்பிடத்தக்க உலகளாவிய பொருளாதார நெருக்கடியை அவர் கணித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஒரு நிதி பேரழிவை அவர் "Cash Crush" என்று கணித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 2026 ஆம் ஆண்டில், முழு உலகளாவிய நிதி அமைப்பும், பணம் முதல் டிஜிட்டல் நாணயம் என அனைத்தின் மதிப்பும் சரிந்துவிடும் என்று பாபா வாங்கா கணித்ததாக பிரிட்டிஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
தற்போது உலகளாவிய சந்தை தொடர்ந்து நிலையற்றதாக இருக்கிறது. இதனால் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. பணவீக்கம் அதிகரித்ததால் கடன்களுக்கும் வட்டி விகிதங்கள் அதிகரித்து வருகின்றன. இது தான் பாபா வங்காவின் தீர்க்க தரிசனமாகும்.
தந்போது பாபா வங்காவின் பல கணிப்புக்கள் பலித்த காரணத்தினால் எலகளாவிய ரீதியில் இந் பொருளாதார நெருக்கடியை எப்படி எதிர்கொள்வது என அவிவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
பாபா வாங்காவின் "பண நெருக்கடி" பற்றிய கணிப்பு, உலகம் ஒரு கட்டத்தில் முழு பணம் சார்ந்த அமைப்பும் சரிவை அனுபவிக்கும் என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. இது உலகளாவிய ரீதியில் பல தாக்கத்தை ஏற்படுத்தும்.
இது தவிர பாபா வாங்கா 2026-ல் ஒரு உலகளாவிய மோதல் ஏற்படும் என்று கணித்துள்ளார்.இது மூன்றாம் உலகப் போராக இருக்கலாம் என்று பலரும் கருதுகிறார்கள்.
தற்போது நமக்கே தெரியும் பல நாடகள் சண்டையில் ஒரு முடிவில்லாமல் தொடர்ந்துகொண்டு இருக்கின்றது. இது மோசமாகி ஒரு வேளை 3ம் உலகப்போராக மாறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த காலகட்டத்தில் மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்கள், ரஷ்யா-அமெரிக்கா மோதல் மற்றும் சீனா-தைவான் மோதல் போன்றவற்றால் அவரது கணிப்பு உண்மையாகிவிடும் என்று பலர் பீதியில் இருக்கின்றனர்.