அமெரிக்காவில் வசிக்கும் ஒரு பெண் தான் இறந்து 8 நிமிடங்களில் உயிர் பெற்றுள்ளார். இதன்போது அவர் இறந்தவுடன் என்ன நடந்தது என்பதை அவர் உணர்ந்ததாக பகிர்ந்து கொண்டுள்ளார்.
அமெரிக்காவில் வசிக்கும் ஒரு பெண் தனக்கு நடந்த ஒரு நம்ப முடியாத சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார். இது உலகம் முழுவதும் உள்ள மக்களை சிந்திக்க வைத்துள்ளது.
இறந்து விட்டார் எனக் கூறப்பட்ட பெண், சுமார் 8 நிமிடங்கள் கழித்து மீண்டும் உயிர் பெற்றுள்ளார். அந்த 8 நிமிடங்களில் நடந்ததை அந்த பெண் விவரித்துள்ளார்.
குறிப்பிட்ட அந்த பெண்பிரியானா லாஃபர்டி ஆவார் இவர் ஆபத்தான நரம்பியல் நோயான மயோக்ளோனஸ் டிஸ்டோனியாவால் பாதிக்கப்பட்டிருந்தார்.
சிகிச்சை பலனின்றி இவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டார். கிட்டத்தட்ட சுமார் 8 நிமிடங்கள் அவர் மூச்சு பேச்சு இல்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால் இதன் பின்னர் 8 நிமிடம் கழித்து அந்த பெண் உயிர் பெற்றுள்ளார். இதன் பின் அவர் இறந்த பின் அந்த மூச்சு பேச்சு இல்லாத நேரத்தில் இறந்த அனுபத்தை பகிர்ந்துள்ளார்.
பிரியானா லாஃபர்டி கூறுகையில், திடீரென்று தனது ஆன்மா தனது உடலுக்கு மேலே உயர்ந்து செல்வது போல் உணர்ந்ததாக கூறினார். "நீங்கள் தயாரா?" என்று கேட்கும் ஒரு குரல் கேட்டதாகவும், பின்னர் எல்லாம் இருளில் மூழ்கியதாகவும் அவர் கூறினார்.
"மரணம் ஒரு மாயை, ஆன்மா ஒருபோதும் இறக்காது. நமது உணர்வு எப்போதும் உயிருடன் இருக்கும், நமது உண்மையான அடையாளம் ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்திற்கு மாறுபட்டு செல்லும்.
என்று அவர் நம்புவதாக கூறுகிறார். பின்னர் நான் பயணம் செய்து குறிப்பிட்ட இடத்தை அடைந்தவுடன் சிந்தனையின் சக்தி அங்குள்ள அனைத்தையும் மாற்றி அமைத்ததாக கூறினார்.
அங்கே தன் மனித வடிவம் இல்லை என கூறினார். அவர் ஆழ்ந்த அமைதியையும் தெளிவையும் அனுபவித்தார்.
"நான் முற்றிலும் அமைதியாக இருந்தேன், ஆனால் உள்ளே இருந்து முழுமையாக உயிருடன் இருப்பதாக உணர்ந்தேன்" பின்னர் அங்கே இருந்த ஒரு தெய்வீக சக்தி அது அனைவரையும் நிபந்தனையற்ற அன்புடன் கவனித்துக்கொள்கிறது" என அவர் கூறினார்.