ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்கை, நிதி நிலை, சிறப்பு குணங்கள், நேர்தறை மற்றும் எதிர்மறை குணங்களில் அதிகளவு ஆதிக்கம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே மிகவும் மோசமான மற்றும் ஆபத்தான பழக்கங்கள் மற்றும் எண்ணங்கள் கொண்டவர்களாக இருப்பார்களாம். அப்படிப்படட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசி மிகவும் ஆபத்தான ராசிகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்த ராசியில் பிறந்தவர்கள் மிகுந்த அறிவுத்திறன் மற்றும் சக்திவாய்ந்த உள்ளுணர்வைக் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் புத்திசாலிகளாகவும் கையாளும் திறமை அதிகம் கொண்டவர்களாகவும் இருப்பதால், சில சமயம் ஆபத்தான விடயங்களை முயற்ச்சி செய்வார்கள்.
விருச்சிக ராசிக்காரர்கள் தந்திரமானவர்களாகவும், இவர்களின் நற்பெயரை அழிக்க முயற்ச்சித்தால் மிகவும் ஆபத்தானவர்களாக மாறிவிடுவார்கள். இவர்களிடம் நெருங்கி பழைகும் போது அவதானமாக இருக்க வேண்டும்.
மேஷம்
மேஷம் என்பது ஆர்வத்திற்கும் தீவிரத்திற்கும் பெயர் பெற்ற ஒரு ராசியாக அறியப்படுகின்றது.
இந்த ராசியினர் மூலோபாய ரீதியாக செயல்படும் அதே நேரம் வலிமையான மற்றும் ஆக்ரோஷமானவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்கள் தங்களுக்கு துரோகம் செய்பவர்களுக்கு நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு மோசமான எதிரியாக மாறிவிடுவார்கள்.
தனுசு
சமூக அழுத்தத்தால் கட்டுப்படுத்த முடியாததால் தனுசு ராசிக்காரர்கள் ஆபத்தானவர்களாக அறியப்படுகின்றார்கள்.
அதிர்ஷ்டவசமாக, தனுசு ராசிக்காரர்கள் கருணை உள்ளம் கொண்டவர்கள், தாராள மனப்பான்மை கொண்டவர்கள் மற்றும் கருணை உள்ளவர்கள்.
இந்த ராசியில் பிறந்தவர்கள் கொடை மற்றும் கருணை உள்ளவர்களாக இருக்கலாம். அவர்கள் நம்பிக்கையுடனும் தன்னம்பிக்கையுடனும் இருப்பார்கள்.
ஆனால் இவர்கள் நம்பிக்கை உடையும் போதும் உணர்வுகள் புறக்கணிக்கப்படும் போதும் மிகவும் ஆபத்தானவர்களாகவும் மூர்க்கதனம் கொண்டவர்களாகவும் மாறிவிடுவார்கள்.