ஜோதிடத்தில் நடக்கும் கிரகப்பெயர்ச்சி சுப அசுப பலன்களை கொடுக்கும். இது ஒவ்வொரு கிரகப்பெயர்ச்சியை அடிப்படையாக வைத்துள்ளது. அந்த வகையில் ஜோதிடத்தில் ராகு மற்றும் கேது நிழல் கிரகங்களாக கருதப்படுகின்றனர்.
இவர்கள் ஒரு ராசியில் நீண்ட காலம் பயணிக்கும் கிரகங்களாகும். ராகு, கேதுவின் பெயர்ச்சி ஒருவரது வாழ்க்கையில் முன்னேற்றத்தையோ அல்லது பிரச்சனைகளையோ கொண்டு வர வாய்ப்புள்ளது.
எனவே இவ்வாண்டு மே மாதம் ராகு கேது பெயர்ச்சி நடைபெற உள்ளது. இதற்கு பின்னர் எந்த ராசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

கும்பம் |
- ராகு கும்ப ராசிக்கு செல்வதால், அடுத்த 1 1/2 ஆண்டுகள் கும்ப ராசிக்காரர்களுக்கு மிகவும் சவாலானதாகவும் இருக்கும்.
- இந்த பெயர்ச்சியின் பின்னர் எந்த விடயத்திற்கும் போராடிகொண்டே இருக்க வேண்டும்.
- திருமணமாகாதவர்களுக்கு அது தொடர்பான பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும்.
- இந்த கால கட்டத்தில் புத்திசாலித்தனமாக இருப்பது மிகவும் முக்கியம்.
- தொழிலில் பல பிரச்சனைகள் வரலாம் எனவே ஒவ்வொரு முடிவும் யோசித்து எடுப்பது நல்லது.
- கும்ப ராசிகாரர்களுக்கு இந்த பெயர்ச்சி மன அழுத்தத்தை கொடுக்கும்.
|
சிம்மம் |
- 2025-ல் நடக்கும் கேது பெயர்ச்சியின் போது சிம்ம ராசிக்கு கேது செல்கிறார்.
- நீங்கள் எடுக்கும் எல்லா விடயத்திலும் பிரச்சனை என்பது இருக்கும்.
- உங்கள் ஆரோக்கியம் மிகவும் தோசமாகக்கூடும் உணவில் கவனம் தேவை.
- நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கும் இலக்கை விட்டு உங்களை திசை மாற இப்பெயர்ச்சி செய்யும்.
- இந்த காலத்தில், நிதானத்தையும் பொறுமையையும் பராமரிப்பது மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
- சிம்ம ராசிக்காரர்களும் வேலை மற்றும் தொழிலில் மாற்றங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
|