மேலும் சில பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று (15) பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 13 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 463 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அதன் இரண்டாம் கட்டமாக இன்று காலை 9 மணி முதல் 12 மணி வரையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அதிகாரிகளுக்கு இவ்வாறு பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.