குரு பகவான் தற்போது வக்ர பயணத்தில் இருக்கிறார். இந்த நிலை வருகின்ற பிப்ரவரி நான்காம் தேதி வரை பயணத்தில் இருக்கும். குருபகவான் நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக் கூடியவர்.
இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், அதிர்ஷ்டம், யோகம் உள்ளிட்டவர்களின் காரணியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவானின் வக்கிர பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
வரும் அக்டோபர் மாதம் 9ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி வரை குரு பகவான் வக்ர நிலையை அடைகிறார். இந்த 4 மாத காலத்தில் பண மழையில் நனைய போகும் ராசிகள் குறித்து தற்போது பார்க்கலாம்.
மேஷம்
- இந்த குரு வக்ரம் மேஷ ராசி அல்லது மேஷ லக்னத்தில் சாதகமாய் அமையும்.
- இந்த ராசியில் பிறந்தவங்களுக்கு வக்ர குரு காலம் பண மழை கொட்டும் காலமாக இருக்கும்.
- இந்த நிலையில் தன ஸ்தானம் எனப்படும் 2ஆம் வீட்டில் குரு பகவான் வக்ரம் பெற உள்ளார்.
- இதனால் பணப்பிரச்சனை குறைந்து வருமானம் அதிகமாகும். செல்வந்தர்களாக வாழ்வீர்கள்.
ரிஷபம்
- ரிஷப ராசி அல்லது ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வருவாய்வருமானம் அதிகரிக்கும் காலம் இது.
- உங்கள் ராசியில் தனக்காரகன் ஆன குரு பகவான் உள்ளதால் எடுக்கும் முயற்சிகள் மூலம் தன வரவு அதிகரிக்கும்.
- நீங்கள் எதிர்பாராத விதத்தில் உங்களை தேடி அதிஷ்டம் வரும்.
- நீங்கள் மிக மிக முக்கியமாக செய்ய வேண்டியது ஒருபோதும் சந்தர்பத்தை தவற விட கூடாது.
கடகம்
- கடக ராசி மற்றும் கடக லக்னத்தில் பிறந்தவர்கள் பண மழையில் நனைய அதிக வாய்ப்பு உள்ளது.
- லாபஸ்தானம் எனும் 11ஆம் இடத்தில் உள்ள குரு வக்ரம் பெறுகிறார்.
- இதனால் பணம் வரும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
- சிலருக்கு வேலைகே செல்லாமல் பணவரவு இருக்கும்.
- குடும்பம் மற்றும் உறவுகள் நிதிரீதியாக உதவுவார்கள்.
சிம்மம்
- சிம்ம ராசி அல்லது சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு தொழில் ரீதியாக குரு பகவான் வக்ரம் அடைய உள்ளார்.
- இதனால் தொழிலில் பெரும் அளவில் லாபம் கிடைக்கும்.
- இதுவரை தொழிலில் சிக்கல்கள் லாபத்தில் பிரச்சனை வந்திருக்கும் தற்போது அது இல்லாமல் செலடவந்தராகும் அளவிற்கு லாபம் கிடைக்கும்.
- செய்யும் செயல்கள் வெற்றி அடைந்து உங்களை உற்சாகப்படுத்தும்.