இன்றைய காலகட்டங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர் வரை அனைவரும் கைகளில் ஸ்மார்ட்போனை பயன்படுத்தி வருகின்றனர்.
போன் இல்லை என்றால் வாழ்கையே இல்லை என்ற அளவிற்கு தற்போது ஸ்மார்ட்போன்களின் முக்கியதுவம் பெரியளவில் காணப்படுகின்றது.
இந்த ஸ்மாட்போன்களில் தழனமும் காதில் இயர் போன் மாட்டி கொண்டு இரப்பது பல நோய்களை கொண்டு வந்து சேர்க்கும். இப்படி காதில் இயர்போன் மாட்டினால் எ்ன்ன பிரச்சனை வரும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
அதிக நேரம் இயர்போன் பயன்படுத்துவதால் காது, கண் மற்றும் மூளை என மூன்றுமே பாதிப்படைகிறது. தொடர்ந்து பாடல் ஒன்றை கேட்டு இயர் போனை காதில் அணிந்திருக்கும் போது உடற்பாகங்கள் எளிதில் பாதிக்கப்படும்.
இந்த தவறை ஒரு போதும் செய்ய கூடாது இதற்கான காரணம் நமது காதுகளின் செவித்திறன் குறைவாக இருக்கும். இதனால் மனதில் ஒரு வகை அழுத்தமும் உண்டாகும்.
மன அமைதி கெட்டுப்போகும். இது படிப்பு, வேலை அல்லது பிற செயல்பாடுகளில் தவறுகள் ஏற்பட வழிவகுக்கும். இயர் போன்களை காதில் மாட்டி வைத்திருக்கும் போது அதில் உண்டாகும் அதிரல் சத்தத்தால் இதயத்துடிப்பு வேகமாக துடிக்க ஆரம்பிக்கும்.
இதனால் இதயம் சார்ந்த பிரச்சனை வரக்கூடும். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்துக்கும் குறைவாக இயர்போன் பயன்படுத்துவது பாதுகாப்பானது.இயர்போன்களுக்கு பதில் ஹெட்போன்களை பயன்படுத்தலாம்.
ஹெட்போனை காதுகளுக்குமேல் வைத்துக் கேட்பதால் அதில் இருந்து வெளியாகும் சத்தம் செவிப்பறையில் நேரடியாகப் ஒலித்து அதை பாதிக்கலாம்