மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி, கரிசல் காட்டுப் பகுதியில் நேற்று (24) மாலை உருக்குழைந்த நிலையில் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கரிசல் புகையிரத பாதைக்கு சுமார் இரண்டு கிலோ மீற்றர் தொலைவில் உள்ள காட்டுப் பகுதியில் குறித்த சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் மாடு தேடிச் சென்ற நபர் ஒருவர் நேற்று (23) மாலை குறித்த சடலத்தை அவதானித்த நிலையில் குறித்த சடலம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
குறித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற மன்னார் பொலிஸார் சடலத்தை அவதானித்து மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
குறித்த குறித்த நபர் சுமார் 20 நாட்களுக்கு முன் உயிரிழந்திருக்க முடியும் என எதிர் பார்க்கப்பட்டுள்ளதோடு, குறித்த சடலம் சிதைவடைந்து உருக்குழைந்த நிலையில் அடையாளம் காண முடியாத நிலையில் காணப்பட்டது.
இன்று (24) காலை சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு தடயவியல் நிபுணத்துவ பொலிஸார் மற்றும் மன்னார் பொது வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த சடலத்திற்கு அருகில் பாதனியும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
உருக்குழைந்த நிலையில் சடலம் மீட்பு
- Master Admin
- 24 March 2021
- (304)

தொடர்புடைய செய்திகள்
- 06 June 2025
- (159)
வீட்டில் பண கஷ்டம் எப்பொழுதும் வரவே கூடா...
- 26 February 2021
- (487)
புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த அர...
- 23 June 2025
- ()
சோமவார பிரதோஷத்தில் சிவன் அருள் பெற எள...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கை சந்தையில் லாப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு
- 23 June 2025
இலங்கையில் சற்று முன் துப்பாக்கிச்சூடு
- 23 June 2025
இடியுடன் கொட்டித் தீர்க்க போகும் கனமழை
- 23 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.