பொதுவாக காய்ச்சல் நேரங்களில் என்ன உணவு சாப்பிட வேண்டும் என சரியாக தெரியாமல் கஞ்சி போன்ற திரவ உணவுகளை எடுத்து கொள்வோம். ஆனால் காய்ச்சல் நேரங்களில் குளிர்மையான உணவுகளை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து கொள்ள வேண்டும்.

மாறாக காய்ச்சலை கையாளும் முறையில் மாற்றம் வேண்டும். சாதாரண காய்ச்சலாக இருந்தாலும் சரி தீவிர காய்ச்சலாக இருந்தாலும் சரி அதனை கையாளும் விதத்தில் தான் இருக்கின்றது.

அந்த வகையில் காய்ச்சல் வந்து விட்டால் அப்படி என்ன தான் செய்ய வேண்டும் என்பதனை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.

காய்ச்சல் நேரங்களில் சாப்பிடாமல் தண்ணீர் குடிக்காமல் இருப்பதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

தொடர்ந்து இது என்ன காய்ச்சல் ஏன் வந்தது? என சரியான காரணத்தை கண்டுபிடித்து அதன்படி, சிகிச்சை செய்தால் காய்ச்சல் கண்டிப்பாக குணமாகும்.

காய்ச்சல் நேரங்களில் நாம் விடும் முக்கிய தவறு என்ன தெரியுமா? இனி இதை செய்யாதீங்க..!! | What To Eat During Fever

இது போன்ற நேரங்களில் தண்ணீர், இளநீர், மோர், பழச்சாறுகள், சூப் போன்ற நீராகாரங்களை அதிகளவில் எடுத்துக்கொள்வது அவசியம். நமது சுற்றிலுள்ள சூழலில் இருக்கும் வைரஸ், பாக்டீரியா, பூஞ்சைஆகிய கிருமிகளிலிருந்து தான் காய்ச்சல் நம் உடலுக்குள் வந்திருக்கும்.

கிருமிகளை எதிர்த்து போராடும் போது நோய் எதிர்ப்பு சக்திக்கும் கிருமிக்கும் பயங்கர போராட்டம் ஏற்படும். இதனால் நம்முடைய உடல் வெப்பமடைந்த நிலையில் இருக்கின்றது. இதன்படி, காய்ச்சலின் தன்மைக்கேற்ப அவற்றை வகைப்படுத்தலாம்.

காய்ச்சல் நேரங்களில் நாம் விடும் முக்கிய தவறு என்ன தெரியுமா? இனி இதை செய்யாதீங்க..!! | What To Eat During Fever

1. வைரஸ் காய்ச்சல்

காய்ச்சலாக இருக்கும் போது தலைவலி, வாந்தி, குமட்டல், மூட்டுவலி ஆகிய பிரச்சினைகள் இருந்தால் அது வைரஸால் ஏற்பட்ட காய்ச்சலாகும்.

2. சிறுநீரக நோய்த் தொற்று

நாம் சிறுநீர் கழிக்கும் போது அந்த பகுதியில் எரிச்சல் அல்லது ரத்தம் வருதல் ஆகிய அறிகுறிகள் இருந்தால் அது சிறுநீரக நோய்த் தொற்றாக இருக்கலாம்.

3. வயிற்றில் ஏதாவது தொற்று

சாப்பிட்ட பின்னர் காய்ச்சலோடு வாந்தி, குமட்டல், பேதி போன்ற அறிகுறிகள் இருந்தால் அது வயிற்றில் உள்ள கோளாறு காரணமாக வந்த காய்ச்சலாக இருக்கலாம்.

காய்ச்சல் நேரங்களில் நாம் விடும் முக்கிய தவறு என்ன தெரியுமா? இனி இதை செய்யாதீங்க..!! | What To Eat During Fever

4. கல்லீரல் நோய்

காய்ச்சலாக இருக்கும் போது கண்கள் மஞ்சள் நிறத்தில் இருந்தால் அது கல்லீரலில் நோய்த் தொற்று ஏற்பட்டிருக்கலாம்.

5. நுரையீரல் நோய்த்தொற்று

காய்ச்சலாக இருக்கும் போது இருமல், தொண்டை வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் நுரையீரலில் நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கலாம்.

6. Heat Stroke

கோடைக்காலங்களில் உடலில் தண்ணீர் இல்லாமல் உடல் களைப்படைந்து இருக்கும் போது ஏற்படும் காய்ச்சலை Heat Stroke என அழைப்பார்கள்.

7. கிருமியினால் காய்ச்சல்

உடலில் கொப்புளங்களோடு காய்ச்சலும் வரும் போது அதனை கிருமியினால் ஏற்பட்ட காய்ச்சல் என்பார்கள். இந்த காய்ச்சல் இரண்டு நாட்களுக்கு இருக்கும்.