சென்னை, திருச்சி, புதுவை ஆகிய இடங்களில் இருந்து புறப்படும் 4 விரைவு ரெயில்கள் இன்றும், நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
:
யாஸ் புயல் நாளை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனால் ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் வழியாக செல்லும் 90 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதில் சென்னை, திருச்சி, புதுவை ஆகிய இடங்களில் இருந்து புறப்படும் 4 விரைவு ரெயில்கள் இன்றும், நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல்- ஹவுரா (எண்- 02822) இன்றும், நாளையும் ரத்து.
திருச்சி- ஹவுரா (எண்- 02664) இன்று ரத்து.
சென்னை- நியூ ஜல்பைடி (எண்- 02611) நாளை ரத்து.
புதுவை- ஹவுரா (எண்- 02868) நாளை ரத்து.