மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று (18) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காரும், மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் உயிரிழந்துள்ளார்.
புதுக்குடியிருப்பு எரிபொருள் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற இந்த விபத்தில் புதுக்குடியிருப்பு ஐந்தாம் வட்டாரத்தினை சேர்ந்த ராஜேஸ்வரன் ரஞ்சித் (55 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இதன்போது, காரில் பயணித்த ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீதியை கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிளை கல்முனை நோக்கி சென்று கொண்டிருந்த கார் மோதியுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி கோர விபத்து! ஒருவர் பலி!
- Master Admin
- 18 May 2021
- (607)
![](https://newstamizha.com/storage/app/news/5eadb2d95e65d004ce6b2951c0fa7f6a.jpg)
தொடர்புடைய செய்திகள்
- 07 February 2025
- (137)
சொந்த நட்சத்திரத்தை மாற்றும் சனி பகவான்....
- 30 November 2020
- (418)
மதுபோதையில் பாம்புடன் விளையாடியவருக்கு ஏ...
- 07 February 2025
- (72)
பணம் உங்களைத் தேடிவரணுமா? சாணக்கியரின் இ...
யாழ் ஓசை செய்திகள்
இன்றைய வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
- 07 February 2025
யாழில் வயோதிபப் பெண்ணிடம் நூதன முறையில் பணம் கொள்ளை
- 07 February 2025
யாழ் போதனா வைத்தியசாலையில் ஊழியர்கள் பற்றாக்குறை
- 06 February 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
இரவு தூங்கும் முன்பு வாழைப்பழம் சாப்பிடலாமா? ஆய்வில் வெளியான தகவல்
- 06 February 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.