டெல்லியைச் சேர்ந்த கர்ப்பிணி மருத்துவர் கொரோனாவால் இறப்பதற்கு முன்பு வெளியிட்டுள்ள காணொளி தற்போது பார்வையாளர்களைக் கலங்க வைத்துள்ளது.

டெல்லியைச் சேர்ந்த 7 மாத கர்ப்பிணியான டிம்பிள்(34), என்ற பெண் பல் மருத்துவருக்கு ஏப்ரல் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அப்பொழுது இரண்டாவது குழந்தையை வயிற்றில் சுமக்கும் 7 மாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு தொற்று தீவிரமாக இருந்ததால், 14 நாட்களில் குழந்தை கருவிலேயே இறந்துள்ளது.

பின்று மறுநாள் குறித்த மருத்துவரும் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இறப்பதற்கு முன்பு இவர் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு விழிப்புணர்வு காணொளியினை அனுப்பியுள்ளார்.

இக்காட்சியில், யாரும் கொரோனா வைரஸை எளிதாக கருத வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட காணொளியினை அவரது கணவர் தற்போது வெளியிட்டுள்ளார்.

இறந்த பெண் பல் மருத்துவருக்கு மூன்றரை வயதில் மகன் ஒருவர் உள்ளது குறிப்பிடத்தக்கது.