தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சென்னையில் குறைந்து வரும் நிலையில், தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 225 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,655 ஆக உயர்ந்துள்ளது.

திருவள்ளூரில் கொரோனாவிலிருந்து 10,746 பேர் குணமடைந்துள்ள நிலையில் 4,430 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதிகபட்சமாக  திருவள்ளூர்-25, கடம்பத்தூர் -22, மீஞ்சூர்-21 என ஒரேநாளில் 225 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.