போலி அமெரிக்க டொலர்கள் அச்சிடப்பட்டுள்ள மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
இது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 8 பேர் வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் போலி நாணயத்தாள் விசாரணை பணியகத்தின் ஊடாக கடந்த 2 மாத காலப்பகுதியில் கந்தளாய் மற்றும் அநுராதபுரம் ஆகிய பிரதேசங்களில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, இலங்கை ரூபாவிற்கு மேலதிகமாக அமெரிக்க டொலர்களும் அச்சிடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
எனவே இவ்வாறு அச்சிடப்பட்டுள்ள போலி அமெரிக்க டொலர்கள், நாணய மாற்றும் நிலையங்களுடனும், நிதி நிறுவனங்களிலும் பரிமாற்றப்படலாம் என குற்றப்புலனாய்வு திணைக்களம் எச்சரித்துள்ளது.
எனவே இது போன்ற தகவல்கள் அறிந்தால் அறிவிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் போலி நாணயத்தாள் விசாரணை பணியகம், பொது மக்களிடம் கோரியுள்ளது.
0112 326 670 அல்லது 0112 320 145 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து அது குறித்த தகவல்களை வழங்க முடியும்.
போலி நாணயத்தாள் விசாரணை பணியகம் பொது மக்களிடம் முன்வைத்துள்ள கோரிக்கை
- Master Admin
- 09 May 2021
- (698)

தொடர்புடைய செய்திகள்
- 16 June 2025
- (50)
வெள்ளியில் மூக்குத்தி அணிந்து பாருங்க......
- 20 December 2020
- (408)
இலங்கையில் மேலும் 262 பேருக்கு கொரோனா
- 12 December 2020
- (568)
2019 உயர்தர மாணவர்கள் தாக்கல் செய்த மனு...
யாழ் ஓசை செய்திகள்
அதிரடி மாற்றம் கண்ட டொலர் பெறுமதி
- 16 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
- 14 June 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.