தஞ்சை மாவட்டத்தில் நேற்று மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 33 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 16 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதனால் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 691 ஆக உயர்ந்துள்ளது.


தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 71 வயது முதியவர் மற்றும் கும்பகோணம் தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 82 வயது முதியவர் என 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 252 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 90 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.