கினிகத்தேனை, எபடீன் நீர்வீழ்ச்சியில் நீராடிக் கொண்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான். 

நீர்வீழ்ச்சியை பார்வையிட வந்த சிலர் நீராடிய போது குறித்த சிறுவன் இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

வௌ்ளவத்தையை சேர்ந்த 15 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் கினிகத்தேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.