இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ், சப்- இன்ஸ்பெக்டர் சுந்தர்மூர்த்தி ஆகியோர் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காரங்காடு பகுதியில் ஒரு வீட்டில் விபசாரம் நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதைதொடர்ந்து போலீசார் காரங்காடு பகுதியில் உள்ள அந்த வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது திக்குறிச்சியை சேர்ந்த விஜு (வயது 34) என்பவர் வீட்டை வாடகைக்கு எடுத்து பெண்களை வைத்து விபசாரம் செய்வது தெரிய வந்தது.

அந்த வீட்டில் 2 இளம்பெண்கள் மற்றும் அவர்களுடன் உல்லாசமாக இருக்க வந்த 2 பேர் மற்றும் விஜு என 5 பேர் இருந்தனர். இதையடுத்து விஜு உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அத்துடன் வீட்டில் இருந்த 2 இளம்பெண்களையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.