தேவர்குளம் அருகே உள்ள மூவிருந்தாளி பகுதியை சேர்ந்தவர் மகாராஜ பாண்டியன். இவரது மனைவி ஜெயலெட்சுமி (வயது 47). இவர்களது மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலம் பாதிப்பு காரணமாக இறந்தார். இதனால் ஜெயலெட்சுமி மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். எனவே அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்காக அவர் மாத்திரை சாப்பிட்டு வந்தார்.


சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜெயலெட்சுமி அளவுக்கு அதிகமாக மாத்திரையை தின்றுள்ளார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் ஜெயலெட்சுமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து தேவர்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.