தளி அருகே பேளக்கரை வனப்பகுதியில் 40 வயது மதிக்கத் தக்க ஆண் பிணம் கிடந்தது. இதுகுறித்து ஆடு மேய்க்க சென்றவர்கள் தளி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக கிடந்தவர் யார்? என்பது குறித்து தளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.