உலகில் 3,500 பாம்பு இனங்கள் உள்ளன. இவைகளில் 250 இனங்கள் மட்டுமே விஷம் உள்ளவை. இந்தியாவில் 300 இன பாம்புகள் உள்ளன. அவற்றில் 52 இனங்கள் மட்டுமே விஷம் உடையவை. 

பாம்புகளுக்கு காதுகள் கிடையாது. உட்புறக் காதுகள் உண்டு. இதன்மூலம் சுற்றியுள்ள அதிர்வுகளை உணர முடியும். 

பல நுாறு ஆண்டுகளுக்கு முன் பாம்புகளுக்கு கால்கள் இருந்ததாகவும், அவற்றை பயன்படுத்தாமல் இருந்ததால் பரிணாம வளர்ச்சியில் கால்களை இழந்ததாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

மலைப்பாம்புகளின் ஆசனவாய் அருகில் இருக்கும் இரண்டு நகங்களை வைத்து பாம்புகளுக்கு கால்கள் இருந்ததை உறுதி செய்ய முடிகிறது.

இப்படி பாம்புகளை பற்றி பேசினால் பேசிக்கொண்டே இருக்கலாம்.ஆனால், பாம்பு என்றாலே பாடையே நடுங்கும். உலகம் முழுதும் பாம்பு கடியால் இறப்பவர்கள் எண்ணிக்கை வருடந்தோறும் கணிசமாக உள்ளது.

இந்நிலையில்,மகாராஷ்ட்ரா மாநிலம் அஹமத்நகரில் உள்ள ஒரு கிணற்றில் மூன்று வைப்பர் வகை பாம்ம்புகளை தீயணைப்பு துறையை சேர்ந்த ஒரு இளைஞர் தில்லாக கிணற்றுக்குள் இறங்கி லாவகமாக பிடிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள், இவர் மனிதனே கிடையாதுடா சாமி என்று பெருமூச்சு விட்டு வருகிறார்கள்.