வேலூர் பாகாயம் இடையன்சாத்து கிராமத்தை சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி அனிதா (வயது 24). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு குழந்தை இல்லாததால் அனிதா மனவருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவரின் தாயார் லட்சுமி பாகாயம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் வேலூர் உதவி கலெக்டர் கணேஷ் விசாரணை நடத்தி வருகிறார்.