தமிழகத்தில் இன்று புதிதாக 790 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 24 ஆயிரத்து 776 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 7 ஆயிரத்து 432 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று 897 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8 லட்சத்து 05 ஆயிரத்து 136 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 208 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-

அரியலூர் - 4
செங்கல்பட்டு - 58
சென்னை - 208
கோவை - 79
கடலூர் - 8
தர்மபுரி - 6
திண்டுக்கல் - 14
ஈரோடு - 18
கள்ளக்குறிச்சி - 5
காஞ்சிபுரம் - 31
கன்னியாகுமரி - 18
கரூர் - 9
கிருஷ்ணகிரி - 8
மதுரை - 23
நாகை - 11
நாமக்கல் - 20
நீலகிரி - 10
பெரம்பலூர் - 0
புதுக்கோட்டை - 5
ராமநாதபுரம் - 4
ராணிப்பேட்டை - 13
சேலம் - 25
சிவகங்கை - 7
தென்காசி - 5
தஞ்சாவூர் - 10
தேனி - 7
திருப்பத்தூர் - 8
திருவள்ளூர் - 32
திருவண்ணாமலை - 9
திருவாரூர் - 15
தூத்துக்குடி - 7
திருநெல்வேலி - 12
திருப்பூர் - 34
திருச்சி - 19
வேலூர் - 27
விழுப்புரம் - 10
விருதுநகர் - 9

உள்நாட்டு விமான நிலையம் - 2

மொத்தம் - 790