நாட்டின் சில இடங்கள் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5.00 மணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன என்பதுடன், மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பான அறிவிப்பை கொவிட் 19 தொற்றுப் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

ஜனவரி மாதம் 04ஆம் திகதி (இன்று) அதிகாலை 5.00 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்படும் பிரதேசங்கள்

கொழும்பு மாவட்டம்

• மோதர (முகத்துவாரம்) பொலிஸ் பிரிவு

கிராம உத்தியோகத்தர் பிரிவு

• வாழைத் தோட்டப் பொலிஸ் பிரிவில் அலுத்கட மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு

• வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவில் அலுத்கட கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு

• பொரளை பொலிஸ் பிரிவில் வனாத்தமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு

• மிரிஹானை பொலிஸ் பிரிவில் தெமலவத்த (பிடகோட்டே)

கம்பஹா மாவட்டம்

பேலியகொட பொலிஸ் பிரிவு

• பேலியகொட கிராம உத்தியோகத்தர் பிரிவு

• மீகஹவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு

• பட்டிய வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் ரோஹன விகார மாவத்த

• பேலியகொட கங்கபட கிராம உத்தியோகத்தர் பிரிவில் நெல்லிகாஹவத்த மற்றும் புரணகொடுவத்த  (Pooranakotu Waththa)

கிரிபத்கொட பொலிஸ் பிரிவு

• விலேகொட வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் ஸ்ரீ ஜயந்தி மாவத்த

இதுவரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஏனைய பிரதேசங்கள் மீண்டும் அறிவிக்கும் வரையில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் பிரதேசங்கள் என்ற ரீதியில் முன்னெடுக்கப்படுவதாக சவேந்திர சில்வா  மேலும் அறிவித்துள்ளார்.

இதேவேளை, கண்டி – பூஜாபிட்டி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட கொஸ்கோட்டை கொலனிக்கு பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அந்த பகுதியில் 31 கொவிட்-19 தொற்று உறுதியானவர்கள் அடையாளங்காணப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.