வவுனியா- பட்டானிச்சூரில் வசித்த இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா முதலாம் ஒழுங்கையில் வசித்த கர்ப்பிணி பெண்ணொருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் உள்ளமை கண்டறியப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேபோன்று வவுனியா 6 ஆம் ஒழுங்கையில் வசிக்கும் கிளிநொச்சி பொறியியல் பீட மாணவன் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டனர்.

இதனால் பட்டானிச்சூரை முடக்கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.