கம்பளை பிரதேசத்தில் மனைவியை கூரிய ஆயுதமொன்றினால் தாக்கி கொலை செய்து உடலுக்கு தீ மூட்டிய கணவன், அதே தீயில் தானும் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று காலை 9.45 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கம்பளை-அங்குருமல்ல பகுதியைச் சேர்ந்த இந்த தம்பதியினர் ஒரே காணியில் வெவ்வேறாக வீடு கட்டி வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், இருவருக்கிடையில் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாகவே இவ்வாறு கணவன் தனது மனைவியை கொலை செய்துள்ளார் எனவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த பெண் 57 வயதானவர் எனவும் கணவனுக்கு 68 வயது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் விவாகரத்து கோரி தாக்கல் செய்த வழக்கு விசாரணையில் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸ் நிலைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.