மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்றுக்கு புதிதாக 3018 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 19,25,066 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 5,572 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மொத்தம் 18,20,021 பேர் குணமடைந்துள்ளனர்.
இன்று 68 பேர் உயிரிழந்ததால், பலியானோரின் மொத்த எண்ணிக்கை 49,373 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் சாராசரி 94.54 சதவீதமாக உள்ளது. இந்தத் தகவலை அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.