மதுரை அருகே உள்ள தனக்கன்குளத்தை சேர்ந்தவர் சுகதேவ்(வயது 29). இவருக்கும் 17 வயது சிறுமிக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.. ஆனால் சிறுமிக்கு 18 வயது முடிந்த உடன் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுக்கப்பட்டது. இந்தநிலையில் சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
அங்கு ஸ்கேன் பரிசோதனை செய்த போதும் முழு வளர்ச்சி அடையாத 5 மாத கரு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அறுவை சிகிச்சை மூலம் டாக்டர்கள் கருவை அகற்றினர். 17 வயது சிறுமியின் கர்ப்பத்திற்கு நிச்சயம் செய்யப்பட்ட சுகதேவ் தான் காரணம் என தெரியவந்தது. இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் சுகதேவை திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.