சென்னை: உடுமலைப்பேட்டையை சேர்ந்தவர் இயக்குநர் ரஞ்சித் (25). இவர், சோழிங்கநல்லூரில் வசித்து வருகிறார். சென்னை அடுத்த அக்கரை பகுதியில், இயக்குநர் ரஞ்சித் வெப் சீரியல் ஷூட்டிங் நடத்தி வந்தார். இதில், சுவேதா (25) என்ற இளம்பெண் நடித்து வந்தார். இந்நிலையில், ரஞ்சித், சுவேதாவிடம் தன்னை காதலிக்க வற்புறுத்தியதோடு, பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனை சுவேதா பலமுறை கண்டித்து வந்தார். அதனை பொருட்படுத்தாமல், தொடர்ந்து சுவேதாவுக்கு ரஞ்சித் தொல்லை கொடுத்து வந்தார். இதனால், மனமுடைந்த சுவேதா நேற்று முன்தினம் மாலை கானத்தூர் காவல் நிலையில் புகார் அளித்தார். புகாரின்பேரில், இன்ஸ்பெக்டர் வேலு, ரஞ்சித் மற்றும் அவரது உதவியாளர்கள் கார்த்திக் (26), ரியாஸ் (23) ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அதில், ரஞ்சித், சுவேதாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதையடுத்து ரஞ்சித்தை கைது செய்த போலீசார் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
நடிகைக்கு பாலியல் தொல்லை வெப் சீரியல் இயக்குநர் கைது
- Master Admin
- 18 December 2020
- (481)
தொடர்புடைய செய்திகள்
- 15 December 2020
- (429)
புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை ஏமாற்றிய...
- 20 April 2026
- (72)
மகளின் மரணத்தின் பின் கடவுளை மறந்த பாடகி...
- 17 December 2020
- (559)
நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டிய வழக்க...
யாழ் ஓசை செய்திகள்
வெப்பமான வானிலை குறித்து எச்சரிக்கை
- 20 April 2026
நுவரெலியாவில் குவியும் சுற்றுலா பயணிகள்!
- 20 April 2026
மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பு
- 20 April 2026
பாடசாலைகள் இன்று மீண்டும் திறப்பு
- 20 April 2026
மாரத்தான் போட்டியில் மனிதர்களை முந்திய ரோபோக்கள்
- 19 April 2026
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
- 10 April 2026
Sreeleela
- 16 April 2026
Sunainaa
- 11 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
