திருவொற்றியூர்: எர்ணாவூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் கவியரசன்(44). அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்தார். கடந்த 13ம் தேதி இரவு கவியரசன் வீட்டின் அருகே திறந்த வெளியில் மூவர் மது அருந்தியுள்ளார்.
அப்போது அவர் களை கவியரசன் தட்டிக் கேட்டார். அதில் மதுபோதையில் இருந்த அவர்கள் கவியரசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரமடைந்த மூன்று பேர் சேர்ந்து கவியரசனை சரமாரியாக அடித்துள்ளனர்.

இதில் மயங்கி அவர் கீழே விழுந்தவுடன் மூவரும் அங்கிருந்து ஓடிவிட்டனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பலத்த காயங்களுடன் இருந்த கவியரசனை சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை கவியரசன் பரிதாபமாக உயிரிழந்தார். புகாரின்பேரில் எண்ணூர் போலீசார் 15 வயது சிறுவனை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடுகின்றனர்.