தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இன்று பிரசாரத்தில் ஈடுபட்ட கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நானும் ரஜினியும் இன்னமும் நட்பை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறோம். அரசியலில் அவரது பயணமும் எனது பயணமும் ஒன்றுதான். ஆனால் அவர் கொள்கை என்ன என்று முழுமையாக சொல்லவில்லை. அதனால் அவரது கொள்கையை சொல்லட்டும். மக்களுக்கு நன்மை பயக்கும் என்றால் நானும் ரஜினியும் எந்த ஈகோவையும் விட்டுக்கொடுத்து ஒன்றிணைய தயார்.
எம்.ஜி.ஆர். திமுக திலகமோ, அதிமுக திலகமோ அல்ல என்றும் அவர் மக்கள் திலகம் என்பதால் ஏழரை கோடி மக்களும் சொந்த கொண்டாடலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.