இந்திய வம்சாவளியினரான திவ்யா மெஹ்ரா கனடாவில் புகழ்பெற்ற ஒரு கலைஞர். அவரது பெற்றோர் இந்தியா இரண்டாக பிரிக்கப்பட்ட காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள். இந்தியா பிரிந்தபோது திவ்யாவின் தந்தை பிறந்த பகுதி பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டது.
கனடாவிலுள்ள ஒரு அருங்காட்சியகத்தில் கலைக்கண்காட்சி ஒன்றிற்கு சென்றிருந்த திவ்யாவின் கவனத்தை அங்கிருந்த ஒரு சிலை ஈர்த்துள்ளது.
அது இந்திய கோயில்களில் வைக்கப்படும் ஒரு சிலை. ஆகவே, அது தொடர்பான ஆய்வுகளில் இறங்கியுள்ளார் திவ்யா. அவரது ஆய்வில், அந்த சிலை இந்தியாவிலிருந்து 100 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட சிலை என்பது தெரியவந்தது.
பல கைகள் சுற்றி, கடைசியாக அது அந்த அருங்காட்சியகத்துக்கு வந்ததை அறிந்துகொண்டுள்ளார் திவ்யா.
திவ்யாவின் முயற்சியின் பேரில், தற்போது அந்த சிலை இந்தியாவிடமே திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.