தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 1,156 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த ஏழு நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. இந்நிலையில் இன்றும் ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இன்று ஒரே நாளில் 1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 31,667 ஆக உயர்ந்துள்ளது. இன்று 15,671 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக 1156  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 135 பேருக்கும், திருவள்ளூரில் 55 பேருக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.