லிந்துலை - ரி.ஆர்.ஐ சென்.கூம்ஸ் தோட்டத்தில் இன்று பிற்பகல் குளவி கொட்டுக்கு இலக்கான பெண் ஒருவர் பலியானார்.

லிந்துலை காவற்துறையினர் இதனை தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவரே பலியானார்.

இதனிடையே குளவி கொட்டு காரணமாக லிந்துலை ரி.ஆர்.ஐ சென்.கூம்ஸ் தோட்டத்தில் தொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்த ஆண் ஒருவர் உட்பட 7 பேர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை, மலையகத்தில் குளவி கொட்டு காரணமாக கடந்த 2 வாரங்களில் இடம்பெற்ற இரண்டாவது மரணம் இதுவாகும்.

கடந்த திங்கட்கிழமை ஹட்டன் - அபோட்ஸ்லி தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடதக்கது.