மூதூர் பச்சனூர் பகுதியில் கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த கால்வாயினுள் குடைசாய்ந்துள்ளது.

குறித்த காரில் மூவர் பயணித்துள்ள நிலையில் ஒருவர் மட்டுமே படுகாயமடைந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்தவர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன், விபத்து குறித்த விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.