இலங்கையில் இதுவரையில் 600 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சுமார் 3000 பொலிஸ் அதிகாரிகளில் இருந்தே இந்த கொரோனா தொற்றாளர்கள் பதிவாகின்றனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கையில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை 87 ஆயிரம் பொலிஸார் இணைந்து மேற்கொண்டு வருவதாக அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்.