பொதுத் தேர்தலை நடாத்துவது குறித்து நாளைய தினம் கலந்தாலோசனை செய்யப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தல் தொடர்பிலான நடவடிக்கைகள் குறித்து நாளைய தினம் ஆராயப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவில் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் நாளைய தினம் இந்த விசேட கூட்டம் நடைபெறவுள்ளது.

பொதுத் தேர்தலை நடாத்துவதனை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமலேயே இன்று தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தேர்தல் ஆணைக்குழு நாளை கூட உள்ளமை குறிப்பிடத்தக்கது.