கொழும்பு நகரிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் தற்காலிகமாக தங்கியுள்ளவர்களை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்துகொள்ளுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்த பதிவினை மேற்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.