எண் கணிதத்தின்படி, ஒருவர் பிறந்த திகதியை வைத்து அவரின் ஆளுமை மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதனை பற்றி அறிந்து கொள்ளலாம்.

ஒரு நபரின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை பற்றி முக்கிய அம்சங்களை எண் கணிதம் கணிக்கிறது. ஒவ்வொரு பெயருக்கும் எண்ணுக்கும் ஏற்ப ஒரு ராசி இருப்பதை போன்று எண் கணிதத்திலும் ரேடிக்ஸ் எண்கள் உள்ளன. இவை ராசிகளை போன்று ரேடிக்ஸும் ஏதோ ஒரு கிரகத்துடன் தொடர்புடையதாக இருக்கும்.

ஒரு நபரின் பிறந்த திகதியைக் கூட்டினால் 1 முதல் 9 எண்களுக்குள் வரும். இவ்வாறு கிடைப்பதே ‘’ரேடிக்ஸ் எண்'' என அழைக்கப்படுகின்றது.

அதே சமயம், உங்களின் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டினால் விதி எண் வரும். இந்த கிரகத்தின் ஆட்சியால் புத்திசாலிகள் மற்றும் வேலை வணிகத்தில் நிறைய முன்னேற்றம் அடைவார்கள். இருப்பினும் பல நேரங்களில் அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை.

எண்கணிதம்படி, குறிப்பிட்ட சில தேதியில் பிறந்தவர்களுக்கு லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாக இருப்பார்கள். அப்படியானவர்க்ள எந்த எண்ணில் பிறந்திருப்பார்கள் என்பதனை பதிவில் காணலாம்.

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் | These Dates Born People Most Success Numerology

1. எண் 2

எண் கணிதத்தின் படி, 2ஆம் எண்ணில் பிறந்தவர்கள் லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் எதையும் மூளையால் அல்ல மனதால் சிந்திக்கும் திறன் கொண்டவர்கள். மனம் ரீதியாக பதில் கொடுப்பார்கள். மற்றவர்களின் தேவைகள் மற்றும் உணர்வுகளை புரிந்து கொண்டு நடந்து கொள்வார்கள். மற்றவர்களுக்கு அதிகமாக உதவிச் செய்வார்கள். அதிலும் குறிப்பாக இவர்களுக்கு விபத்து ஏதாவது நடக்கப்போகிறது என்றால் முன்கூட்டியே தெரிந்துவிடும்.

2. எண் 9 

 எண் கணிதத்தின் படி, 9ஆம் எண்ணில் பிறந்தவர்கள் ரொம்பவே கருணையுடையவர்களாக இருப்பார்க்ள. ஆன்மீகம் மீது அதிக பற்றுக் கொண்டவர்களாக இருப்பார்கள். மனிதாபிமானம் ரொம்பவே அதிகமாக இருக்கும். பிறருக்கு சேவை செய்வதிலும், வழிக்காட்டுவதிலும் தங்களது வாழ்க்கையை அர்ப்பணிப்பாரகள். இவர்களுக்கு நடக்கப்போகும் ஆபத்து முன்பே தெரியும்.

3. எண் 8

எண் கணிதத்தின் படி, 8 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் ஆன்மீக ரீதியில் ரொம்பவே வளர்ச்சி அடைந்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்களது வாழ்க்கையில் முக்கிய பாதை மாற்றங்களை காண்பார்கள். கனவுகள் மூலம் எதிர்காலத்தில் நடக்கும் விடயங்களை அறிந்து கொள்வார்கள்.