இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். குவைத்தில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தப்பட்ட 51 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவரோடு சேர்த்து இலங்கையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி 10 பேர் உயிரிழந்துள்ளனர். குவைத்தில் இருந்து நாடு திரும்பி திருகோணமலை மங்கி பிரிட்ஜ் இராணுவ முகாமில் தனிமைப்படுத்தலில் இருந்த பெண்ணே திடீரென உயிரிழந்துள்ளார். அவருக்கு இதய நோய் இருந்ததாக கூறப்படுகின்றது.