கொரோனா வைரசை குழந்தைகள் பரப்புவதற்கான சான்றுகள் கிடைத்துள்ளதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தற்போது இறங்கு முகத்தில் செல்கின்றது. இருப்பினும் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே குழந்தைகள் வைரஸ் காவிகளாகவுள்ளதாக ஐ.சி.எம்.ஆர் இயக்குனர் ஜெனரல் பல்ராம் பார்கவா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், 17 வயதுக்கு உட்பட்டவர்களில் 8 வீதமானோருக்கே தொற்றுகள் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுவே 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை எடுத்து கொண்டால் அது ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.